நான் யார் ?
நல்ல தாய் என்றார்.
சிந்தனையாளர் என்றார்.
நல்ல மனம் படைத்தவள் என்றார்.
அடங்காபிடாரி என்றார்.
சுதந்திர பறவை என்றார்.
துரு துரு என்றார்.
எழுத்தாளர் என்றார்.
அவள் சமைப்பாள் என்றார்.
திறமைசாலி என்றார்.
வெகுளி என்றார்.
வாயாடி என்றார்.
புத்திசாலி என்றார்.
முட்டாள் என்றார்.
முற்போக்குவாதி என்றார்.
தனிமரம் என்றார்.
ஆன்மீகவாதி என்றார்.
கலைரசிகை என்றார்.
வார்த்தைகளின் அடிமை என்றார்.
அனுபவங்களை நாடுபவள் என்றார்.
ஆழத்தை தேடுபவள் என்றார்.
உலகம் அறியாதவள் என்றார்.
தொழிலதிபர் என்றார்.
எதற்கும் பணியா கர்வசாலி என்றார்.
எதனை பார்கிறாரோ, அதுவே நீ... என்றாய்.
எதனை பார்கிறாயோ, அதுவே நீ... என்றாய்.
இதுக்கெல்லாம் மீறி 'நீ யார் ?' என்றாய்.
'நீ சொல்' என்றேன்.
'தேடு' என்றாய்.
- ஸ்ரீ வித்யா சீனிவாசன்
1 Comment Add a Comment?
Sudha Krishnamoorthy
Posted on Oct. 11, 2020, 7:02 a.m.
migha azhagana kavidhaiyil! migha aazhamaana kelvi! Padhil solbavar yaaro. Avar kannotam yennavo!
Adhuve nee enbar. Adhai azhagaaga ezhidhiya Srividhya nee nee thaan enben. Adhai neeye theermanikkanum enben.
Thanks for sharing. Keep writing.